புதன், 13 நவம்பர், 2013

தமிழனின் எல்லைகள் பெரியது மனமோ சிறியது



நிலைபெற் றோங்குந் தமிழகத்
தாறறி வுடைமைப் பேறுறுமக்கள்
முன்னர்த் தோன்றி மன்னிக் கெழுமி
இமிழிய லொலிசேர் தமிழ்மொழி பேசி,
மண்ணிற் லொவிசேர் தமிழ்மொழி பேசி,
மண்ணிற் பலவிட நண்ணிக் குடியிருந்
தவ்வவ் விடத்துக் கொவ்விய வண்ணம்
கூற்று நடையுடை வேற்றுமை யெய்தி
பற்பல வினப்பெயர் பெற்றுப் பெருகினர்
- நூல் கர்ணாமிர்த சாகரங்
தமிழன் உலகம் முழுதும் பரவி இருக்கிறான். அவன் கால்பதிக்காத நாடுகள் இல்லை, கால்பதிக்காத துறைகள் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் நம்மில் பெரும்பான்மையானோருக்கு தமிழ்நாடு என்ற என்ற வட்டத்தை தாண்டி உலகின் மற்ற பாகங்களில் வாழும்  நம் இனத்தவர் பற்றிய வரலாறுகள், அன்றாட நிகழ்வுகள், செய்திகள் என எதாவது தெரியுமா? என்றால் நிச்சயம் தெரியாது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்டு சொன்னால் இவற்றை நம்மிடம் கொண்டுவர வேண்டிய ஊடகத்துறை தன் கடமை மறந்து செயல்படுவதை தான் சொல்லமுடியும். எப்படி இவர்களை குற்றம் சொல்வது சரியா? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை நாமே தெரிந்து கொள்ளாமல் மற்றவர்களை குறை சொல்வது சரியா என்று என்று நினைக்க தான் தோன்றும். 

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...